அரச்சலூர் அருகே மின்சாரம் பாய்ந்து ஜே.சி.பி.டிரைவர் பலி

திருமண நாளான்று சோகம் அரச்சலூர் அருகே மின்சாரம் பாய்ந்ததில் ஜே.சி.பி டிரைவர் பலியானார்.

Update: 2021-11-30 12:00 GMT

பைல் படம்.

ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அடுத்த வடபழனி குமரன்நகர் முதல் வீதியை சேர்ந்தவர் விக்ரமன் ஜே.சி.பி (வயது 40). இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். விக்கிரமனுக்கு நேற்று திருமண நாள். இதனால் மனைவி, குழந்தைகளுடன் திருமண கொண்டாட நாளை வீட்டில் இருந்துள்ளார். கடந்த சில நாட்களாக அரச்சலூர் பகுதியில் மழை பெய்து வருகிறது. இதனையடுத்து வீட்டிற்கு முன் பக்கம் உள்ள ஆட்டுக்கொட்டகைக்கு மின் இணைப்பு கொடுப்பதற்காக விக்ரமன் ஒயரை இழுத்த போது எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசியது.

அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து விக்ரமனை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக அவர் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே விக்ரமன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அரச்சலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News