ஈரோடு மாவட்டத்தில் இன்று 82 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு

ஈரோடு மாவட்டத்தில் இன்று 256 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Update: 2022-02-15 14:45 GMT

பைல் படம்

ஈரோடு மாவட்டத்தில் நேற்று 4 ஆயிரத்து 133 பேருக்கு பரிசோதனை செய்ததில் 98 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது.

இந்த நிலையில் இன்று சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்ட பட்டியலின்படி புதிதாக மேலும் 82 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 128 ஆக உயர்ந்தது.

மேலும் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 597 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பினர். இதுவரை மாவட்டத்தில் 1 லட்சத்து 29 ஆயிரத்து 810 பேர் தொற்றில் இருந்து மீண்டு உள்ளனர். மாவட்டத்தில் இதுவரை 732 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ள நிலையில் தற்போது தொற்று உள்ள ஆயிரத்து 586 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Tags:    

Similar News