ஈரோடு மாவட்டத்தில் நேற்று திடீரென பெய்த மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

ஈரோட்டில் நேற்று திடீரென மழை பெய்தது. வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்

Update: 2022-03-08 07:45 GMT

பைல் படம்.

ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று பகலில் கடும் வெயில் அடித்தது. இந்த நிலையில் கொடுமுடி , சத்தியமங்கலம்  ஆகிய பகுதிகளில் மாலை 6 மணி முதல் 8 மணி வரை தூறல் மழை பெய்தது. பகலில் கடுமையான வெயில் அடித்த போதிலும் மாலையில் பெய்த தூறல் மழை காரணமாக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மாவட்டம் முழுவதும் நேற்று பெய்த மழையின் அளவு விவரம் பின்வருமாறு:- 

கொடுமுடி - 1.0 மி.மீ 

சத்தியமங்கலம் - 1.0 மி.மீ  

மாவட்டத்தில் மொத்த மழைப்பொழிவு - 2.0 மி.மீ 

மாவட்டத்தில் சராசரி மழைப்பொழிவு - 0.1 மி.மீ 

Tags:    

Similar News