ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.23 ஆயிரத்துக்கு நிலக்கடலை விற்பனை

அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.23 ஆயிரத்துக்கு நிலக்கடலை விற்பனை செய்யப்பட்டது.

Update: 2022-01-19 10:15 GMT

ஈரோடு மாவட்டம், அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் இன்று நடைபெற்ற ஏலத்தில்.  10 மூட்டைகள் நிலக்கடலை காய் கொண்டு வரப்பட்டது.இதில் குறைந்த பட்சமாக 68 ரூபாய் 69 பைசாவிற்கும், அதிகபட்சமாக 69 ரூபாய் 89 பைசாவிற்கும், சராசரியாக 69 ரூபாய் 29 பைசாவிற்கும் ஏலம் போனது.

இன்றைய வர்த்தகத்தில், 3.32 குவின்டால் நிலக்கடலை கொண்டு வரப்பட்ட நிலையில், மொத்தம் 23 ஆயிரத்து 159 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது என விற்பனைக் கூடத்தின் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

Tags:    

Similar News