பவானியில் நாளை மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

ஈரோடு மாவட்டம் பவானி கோட்ட மின்சார வாரிய குறைதீர் கூட்டம் நாளை நடைபெறவுள்ளது.

Update: 2022-09-13 10:00 GMT

பைல் படம்

ஈரோடு மாவட்டம் கோபி மின் பகிர்மான வட்டம் சார்பில், பவானி பகுதி நுகர்வோருக்கான, மாதாந்திர குறைதீர் கூட்டம், மேட்டூர் - பவானி சாலையில் ஊராட்சிக்கோட்டை செயற்பொறியாளர் அலுவலகத்தில், நாளை காலை, 11:00 முதல், மதியம் 1:00 மணி வரை நடக்கிறது. பவானி கோட்ட பகுதிக்குட்பட்ட மின் நுகர்வோர் தங்களது மின்சாரம் சம்பந்தமான குறைகளைத் தெரிவித்து நிவர்த்தி செய்து பயன்பெறலாம் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானம் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News