அந்தியூர் அருகே விபத்தில் மூளைச்சாவு அடைந்த வியாபாரி உடல் உறுப்புகள் தானம்: அரசு சார்பில் அஞ்சலி!
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே விபத்தில் மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்புகள் தானம் செய்த வியாபாரியின் உடலுக்கு அரசு சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.;
அந்தியூர் அருகே விபத்தில் மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்புகள் தானம் செய்த வியாபாரியின் உடலுக்கு அரசு சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள சந்தியபாளையத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 42). அரிசி வியாபாரி. இவர் கடந்த மாதம் 29ம் தேதி அந்தியூரில் இருந்து பவானி நோக்கி வியாபார வேலையாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, பருவாச்சி பகுதியில் வீசிய சூறைக்காற்றில் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.
ஆனால், சரவணன் நேற்று முன்தினம் இரவு மூளைச்சாவு அடைந்தார். இதனால், அவரது உறவினர்கள் சரவணனின் உடல் உறுப்புகளை தானமாக அளித்தனர். இதுகுறித்து, அறிந்ததும் நேற்று காலை அவரது வீட்டுக்கு அந்தியூர் தாசில்தார் கவியரசு, வருவாய் ஆய் வாளர், செந்தில்ராஜா உள்ளிட்ட அலுவலர்கள் சென்றனர்.
பின்னர், இறந்த சரவணனின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். உயிரிழந்த சரவணனுக்கு குணசுந்தரி என்ற மனைவியும், சச்சின் (14) என்ற மகனும், நிஷா கோபிகா (12) என்ற மகளும் உள்ளனர்.