கோபி கல்லூரி மாணவிகள் தேசிய கபாடி போட்டிக்கு தேர்வு

கோபிச்செட்டிப்பாளையத்தில் உள்ள பி.கே.ஆர் மகளிர் கல்லூரி மாணவிகள் தேசிய கபாடி போட்டிக்கு தேர்வு.

Update: 2021-12-08 09:30 GMT

பைல் படம்.

அரியானா மாநிலத்தில் வருகிற பிப்ரவரி மாதம் தேசிய அளவிலான கேலோ இந்தியா கபாடி விளையாட்டு போட்டிகள் நடக்கிறது. இதையொட்டி சென்னை உள் விளையாட்டு அரங்கில் - விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தமிழ்நாடு கபாடி கழகம் மூலம் 18 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான போட்டிகள்  நடத்தப்பட்டு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் சுமார் 300-க்கும் மேற்பட்ட வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

மாணவிகள் பிரிவில் ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம்  பி.கே.ஆர் மகளிர் கலைக் கல்லூரி மாணவிகள் வைதேகி, சுவேதா ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர். இதையொட்டி அந்த 2 மாணவிகளை கல்லூரி தாளாளர் பி.என்.வெங்கடாசலம், முதன்மை நிர்வாக அலுவலர் ஜெகதா லட்சுமணன், முதல்வர் மைதிலி, பேராசிரியர்கள், அலுவலர்கள், உடற்கல்வி இயக்குநர் சங்கீதமுத்து, பயிற்சியாளர்கள், எஸ்.பி.பழனிச்சாமி, கிருஷ்ண வேணி உள்பட பலர் வாழ்த்தி பாராட்டினர்.

Tags:    

Similar News