டீக்கடையில் தீ விபத்து

Update: 2021-03-14 05:32 GMT

ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் ராம்நகரில் முகமதுஅலி என்பவர் டீக்கடை நடத்திவருகிறார். கடையை வேறு இடத்திற்கு மாற்றம் செய்வதாக கடந்த ஒரு வாரகாலமாக கடையை இயக்காமல் புதிய கடை திறப்பு விழா வேலைகளில் ஈடுபட்டிருந்துள்ளார். இந்நிலையில் ராம்நகரில் செயல்படும் டீக்கடையிலிருந்து கரும்புகைகள் வெளியேறுவதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் கடை உரிமையாளருக்கும் கோபிசெட்டிபாளையம் தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவல் பெற்று சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் அருகில் உள்ள கடைகளுக்கு தீ பரவாமல் தடுத்ததுடன் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு, சுமார் ஒரு மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். அதற்குள் கடைக்குள் இருந்த டேப்பிள்கள் நாற்காலிகள் பாத்திரங்கள் மற்றும் இருசக்கர வாகனம், மிதிவண்டிகள் என சுமார் ஒரு லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்தது. தீவிபத்திற்கான காரணம் குறித்து கோபிசெட்டிபாளையம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மூடியிருந்த கடையில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News