கோபிசெட்டிபாளையத்தில் அடர்வனம் மரக்கன்று நடும் விழா
கோபிசெட்டிபாளையத்தில் அடர்வனப் பகுதி உருவாக்குவதற்காக பணியை கோபி நகர்மன்றத் தலைவர் என்.ஆர். நாகராஜ் துவக்கிவைத்தார்.;
அடர்வனம் மரக்கன்று நடும் விழாவில் எடுக்கப்பட்ட படம்
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட பத்தாவது வார்டில் அடர்வனப்பகுதி உருவாக்குவதற்காக மரக்கன்றுகளை நடும் விழா நடைபெற்றது. இதில் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கும் பணியை கோபி நகர்மன்றத் தலைவர் என்.ஆர். நாகராஜ் துவங்கி வைத்தார். விழாவில், கோபி நகராட்சி ஆணையாளர் பிரேம் ஆனந்த், நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் செந்தில், கார்த்தி, பாலமுருகன் மற்றும் திமுக கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.