கோபி அருகே வாகன சோதனையில் 1.2 கிலோ கஞ்சா பறிமுதல்: இருவர் கைது

ஈரோடு மாவட்டம் கோபி அருகேகாவல்துறை வாகன சோதனையில் 1.2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு இதுதொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2024-07-30 13:00 GMT

கைது செய்யப்பட்ட இருவரை படத்தில் காணலாம்.

கோபி அருகே போலீசார் நடத்திய வாகன சோதனையில் 1.2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினர் கள்ளிப்பட்டி - கோபிசெட்டிபாளையம் சாலையில் பசு ஈஸ்வரன் கோயில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். 

அப்போது, அந்த வழியாக ஒரு இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேரை நிறுத்தி காவல்துறையினர் சோதனை செய்தனர். சோதனையில் அவர்களிடம் 1.200 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. 

அதனைத் தொடர்ந்து, கஞ்சாவை பறிமுதல் செய்த காவல்துறையினர்அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் கள்ளிப்பட்டியைச் சேர்ந்த கனகராஜ் (வயது 47), கோபி அங்காளபரமேஸ்வரி நகரைச் சேர்ந்த ஆறுமுகம் (வயது 52) ஆகியோர் என்பது தெரிய வந்தது.

மேலும், இவர்கள் விற்பனை செய்ய கஞ்சாவை மறைத்து வைத்து கொண்டு வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து, காவல்துறையினர் இருவரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து 1.200 கிலோ கஞ்சா மற்றும் இருசக்கர வாகனம் போன்றவற்றை பறிமுதல் செய்தனர். 

Tags:    

Similar News