கோபிசெட்டிபாளையம் அருகே கஞ்சா விற்பனை செய்தவர் கைது
கோபிசெட்டிபாளையம், கொடிவேரி பிரிவு அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபரை கடத்தூர் போலீசார் கைது செய்தனர்.;
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரிபிரிவில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கடத்தூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின்பேரில் கடத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் மோகனன் மற்றும் போலீசார் அப்பகுதிக்கு சென்று விசாரித்தனர். அப்போது அங்குள்ள மறைவான இடத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த ஜாகரின் என்கிற ஆரோக்கியராஜ் என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 100 கிராம் அளவுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.