ஈரோட்டில் செயற்கை நகை தயாரித்தல் இலவச பயிற்சி: நீங்கள் தயாரா?

ஈரோட்டில் பெண்களுக்கான செயற்கை நகைகள் தயாரித்தல் குறித்த இலவச பயிற்சி வகுப்பு, வரும் ஏப்ரல் 25ஆம் தேதி தொடங்குகிறது.

Update: 2022-04-13 11:45 GMT

கனரா வங்கி சார்பில் வெளியிட்ட அறிவிப்பு நோட்டீஸ்.

ஈரோடு கனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில், பெண்களுக்கான இலவச செயற்கை நகை தயாரித்தல் பயிற்சி வரும் 25ம் தேதி தொடங்கி, 13 நாட்கள்,  காலை 9:30 மணி முதல், மாலை 5:30 மணி வரை நடைபெற உள்ளது. இப்பயிற்சியின் போது,  சீருடை, உணவு உட்பட அனைத்தும் இலவசம். பயிற்சியின் முடிவில் சான்றிதழ் வழங்கப்படும்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கிராம பஞ்சாயத்துக்களில் வசிப்பவர்கள் மட்டும் பயிற்சியில் கலந்து கொள்ளலாம். 18 வயதிற்கு மேல் 45 வயதிற்கு உட்பட்டவர்கள், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள், 100 நாள் வேலை திட்டத்தில் இருப்பவர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் இப்பயிற்சியில் கலந்து கொள்ளலாம்.

பயிற்சியானது, கனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம், ஆஸ்ரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகம், 2ம் தளம், கொல்லம்பாளையம் பைபாஸ் சாலை, ஈரோடு - 638 002 என்ற முகவரியில் வழங்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு 0424 2400338, 87783 23213, 72006 50604 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு, முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News