சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட் நிலவரம்

சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் கனகாம்பரம் கிலோ ரூ.1,505-க்கு ஏலம் போனது.

Update: 2021-11-30 00:30 GMT

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் காலை 7 மணி முதல்,  மதியம் 2 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். அதன்படி நேற்று வழக்கம்போல் பூக்கள் ஏலம் நடந்தது. இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் 3 டன் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.

இந்த ஏலத்தில், மல்லிகைப்பூ கிலோ ஒன்று ரூ.1,190-க்கும், முல்லை ரூ.660-க்கும், காக்கடா ரூ.700-க்கும், செண்டுமல்லி ரூ.75-க்கும், பட்டுப்பூ ரூ.66-க்கும்,ஜாதிமல்லி ரூ.500 க்கும், கனகாம்பரம் ரூ.1,505-க்கும், சம்பங்கி ரூ.30 க்கும், அரளி ரூ.420-க்கும், துளசி ரூ.40-க்கும், செவ்வந்தி ரூ.160-க்கும் ஏலம் போயின.

Tags:    

Similar News