ஈரோடு மாணவர்கள் உதவித்தொகை விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

தேசிய சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை பெற மாணவர்கள் இணையத்தில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-12-14 07:30 GMT

பைல் படம்.

தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிறுவனங்களில் ஒன்றாம் வகுப்பு முதல் பிஎச்டி வரை படிக்கும் இஸ்லாமிய, கிறிஸ்தவ, புத்த, பார்சி, ஜெயின் மத மாணவ, மாணவியர் கல்வி உதவித்தொகை பெற, இணையதளம் மூலம் விண்ணப்பம் பெறப்படுகிறது. www.scholarships.gov.in என்ற இணையதளத்தில், கடந்த 10ம் தேதி வரை விண்ணப்பிக்க வாய்ப்பு தரப்பட்டிருந்தது. தற்போது வரும் டிசம்பர் 15ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News