ரக்ஷா பந்தன் பண்டிகை: ஈரோட்டில் கொண்டாட்டம்
ஈரோட்டில் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் ரக்ஷா பந்தன் பண்டிகையை இன்று கொண்டாடி மகிழ்ந்தனர்;
ரக்ஷா பந்தனையொட்டி சகோதரருக்கு ராக்கி கயிற்றை கட்டி , ஆரத்தி எடுத்து எடுக்கும் பெண்
சகோதரத்துவத்தை போற்றும் வகையில் ஆண்டு தோறும் ரக்ஷா பந்தன் பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக சகோதர, சகோதரிகளுக்கிடையேயான உறவை வலுப்படுத்தக்கூடிய ரக்ஷா பந்தன் வட இந்தியாவில் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படும். இந்த பண்டிகையை ரத்த உறவு கொண்டவர்கள் மட்டுமில்லாமல், ரத்த சம்பந்தமில்லாத சகோதர சகோதரியாகப் பழகக்கூடிய ஆண்களும் பெண்களும் கூட கொண்டாடி வருகின்றனர்.
அதன் ஒருபகுதியாக ஈரோடு மாநகர் பகுதியில் வசிக்கும் வடமாநிலத்தை சேர்ந்த குடும்பத்தினர் ரக்ஷா பந்தன் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர். நிகழ்ச்சியின் போது பெண் ஒருவர் தனது குடும்பத்தில் இருக்கும் சகோதரர்களுக்கு ராக்கி கயிற்றை கட்டி , ஆரத்தி எடுத்து தனது சகோதர பாசத்தை வெளிப்படுத்தினர்.
இதனை தொடர்ந்து ராக்கி கட்டிய சகோதரிக்கு தனது அன்பை வெளிப்படுத்தும் விதமாக சகோதரர்கள் பரிசு பொருட்களை வழங்கினர்.