ஈரோடு: கள்ளக்காதலனின் கழுத்தை நெறித்து கொலை செய்த கள்ளக்காதலி

ஈரோட்டில், போதையில் தாக்கிய கள்ளக்காதலனை, கழுத்தை நெறித்து, கள்ளக்காதலி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2021-09-10 10:00 GMT

கொலை செய்யப்பட்ட மதன்.

கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் மகேஸ்வரன்-மஞ்சு தம்பதியனர். இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். இவர்களின் உறவினரான பெயிண்டிங் தொழில் செய்து வரும் மதன் என்பவர், அடிக்கடி மகேஸ்வரன் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். இதில் மஞ்சுவிற்கும் மதனுக்கும் ஏற்பட்ட பழக்கம், நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது‌.

இதனை அறிந்த மகேஸ்வரன், இருவரையும் கண்டித்துள்ளார். இதை தொடர்ந்து, 6 மாதத்திற்கு முன்பு மஞ்சுவும் மதனும், ஈரோடு முத்தம்பாளையத்தில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்துள்ளனர். மதன் அடிக்கடி மதுபோதையில் மஞ்சுவை அடித்து துன்புறுத்தி வந்துள்ளதாக கூறப்படுகிறது.

நேற்றிரவு மதுபோதையில் வந்த மதன், மஞ்சுவை அடித்து துன்புறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மஞ்சு, வீட்டில் இருந்த கயிறால் மதனின் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். பின்னர் சம்பவம் குறித்து, மதனின் உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், மஞ்சுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News