ஈரோடு: காசிபாளையம், முத்தம்பாளையம் பகுதிகளில் வரும் 23-ம் தேதி மின்நிறுத்தம்

ஈரோடு காசிபாளையம் துணை மின் நிலையத்தில் மின்சாரம் பெறும் பகுதிகளில் வரும் 23-ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

Update: 2022-09-20 06:45 GMT

பைல் படம்

ஈரோடு காசிபாளையம் துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளில் வரும் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 23) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின் வாரியம் அறிவித்துள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:- கே.கே.நகர், சென்னிமலை சாலை, ரங்கம்பாளையம், இரணியன் வீதி, பெரியசடையம்பாளைம், சிவம் நகர், அண்ணா நகர். சேனாதிபதிபாளையம், இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் காசிபாளையம், சாஸ்திரி நகர், ஜீவா நகர், மூலப்பாளையம், நாடார்மேடு, கொல்லம்பாளையம், பச்சப்பாளி, செந்தில் நகர், முத்தம்பாளையம் ஹவுசிங்யூனிட் பகுதி 1,2,3. அம்பிகை நகர், அன்னை நகர், நல்லியம்பாளையம் மற்றும் பழைய ரயில் நிலையப் பகுதிகள்.

Tags:    

Similar News