தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் நெல் கொள்முதல் பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு

ஈரோடு மண்டலத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Update: 2022-01-16 11:45 GMT

காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு.

தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிபக் கழகம் ஈரோடு மண்டலத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பதவிகளுக்கு தகுதி வாய்ந்த நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பிக்கலாம்.

பதவியின் பெயர்:

பட்டியல் எழுத்தர்

காவலர்

வயது வரம்பு:

01.07.2021 தேதியின் படி, விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்.

அதிகபட்ச வயது:

OC - 32

BC/MBC - 34

SC/ST - 37 

கல்வித்தகுதி:

பருவ கால பட்டியல் எழுத்தர் – அறிவியலில் இளநிலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். (B.Sc., Botany, Zoology, Chemistry, Physics, Maths and Bio Chemistry)

பருவ கால காவலர் – 12-ஆம் வகுப்பு Fail / 8 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்:

பட்டியல் எழுத்தர் : ரூ.2410/- + DA

காவலர் : ரு. 2359/- + DA

தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

நேர்காணல் நடைபெறும் தேதி :

பட்டியல் எழுத்தர் - 27.01.2022 காலை 11 மணிக்கு

காவலர் - 28.01.2022 காலை 11 மணிக்கு ‌

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் தேவையான ஆவணங்களுடன் நேர்முகத தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.

முகவரி:

மண்டல மேலாளர்,மண்டல மேலாளர் அலுவலகம்,தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், எச்38ஏ/10, மாணிக்கம்பாளையம் , ஹவுசிங் யூனிட் ,ஈரோடு

Tags:    

Similar News