ஈரோடு: அசோசியேசன் ஆப் ஆல் டெக்ஸ்டைல்ஸ் பிராசசர்ஸ் சார்பில் ரூ. 2.50 லட்சம் நிவாரணம்

ஈரோடு, அசோசியேசன் ஆப் ஆல் டெக்ஸ்டைல்ஸ் பிராசசர்ஸ் சார்பில் ரூ. 2.50 லட்சம் ரூபாய், முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்காக வழங்கப்பட்டது.

Update: 2021-06-05 11:04 GMT

ஈரோடு, அசோசியேசன் ஆப் ஆல் டெக்ஸ்டைல்ஸ் பிராசசர்ஸ் சார்பில், ரூ. 2.50 லட்சம், தமிழக முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு, அமைச்சர் சு.முத்துசாமியிடம் வழங்கப்பட்டது.

ஈரோட்டில், வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமியிடம், அசோசியேசன் ஆப் ஆல் டெக்ஸ்டைல்ஸ் பிராசசர்ஸ் சார்பில், அதன் தலைவரான முன்னாள் எம்.எல்.ஏ தென்னரசு, செயலாளர் சண்முகசுந்தரம் ஆகியோர், 2.50 லட்சம் ரூபாயை, தமிழக முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கினர்.

இந்நிகழ்வில், அசோசியேஷன் பொருளாளர் ஆர்.முருகானந்தம், கவுரவத் தலைவர் தேவராஜ், துணை தலைவர் செல்வம், இணை செயலாளர் கே.பி.சக்திவேல், ஈஸ்வரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

இதேபோல், ஈரோடு ஸ்கிரீன் பிரிண்டர்ஸ் அசோசியேசன் தலைவர் தென்னரசு, செயலாளர் முருகானந்தம் ஆகியோர், ஒரு லட்சம் ரூபாயை, முதல்வரின் நிவாரண நிதிக்கு, அமைச்சர் சு.முத்துசாமியிடம் வழங்கினர். அப்போது பொருளாளர் ஆர்.நாகராஜன், துணை தலைவர்கள் எஸ்.ஏ.ஜோதிபாசு, வி.ராஜேந்திரன் உட்பட பலர் உடனிருந்தனர். 

Tags:    

Similar News