ஈரோடு அரசு மருத்துவமனைக்கு ரூ.10 லட்சம் மதிப்பில் மருத்துவ உபகரணங்கள் வழங்கல்

அரிமா சங்கம் சார்பில் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டது.

Update: 2021-06-09 15:50 GMT

ஈரோடு மாவட்ட அரிமா சங்கம் சார்பில் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு, மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டன. 

ஈரோடு மாவட்ட அரிமா சங்கம் சார்பில், ஈரோடு அரசு மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியின் மூலம் ஆக்சிஜன் செறிவூட்டி, பல்ஸ் ஆக்சி மீட்டர், ரத்த அழுத்தம் பார்க்கும் கருவி, ஆக்சிஜன் முககவசம், கவச உடை, என்–95 மாஸ்க், 3 லேயர் மாஸ்க், கிளவுஸ் என, பத்து லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை, வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி மூலம், மருத்துவமனை உறைவிட மருத்துவர் கவிதாவிடம் வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில், அரிமா சங்கத்தின் மாவட்ட ஆளுனர் இளங்கோவன், தனபாலன், நிர்வாகிகள் மகேஸ்வரன், முத்தையா உட்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News