ஈரோடு காவல்துறை நடத்தும் போட்டிகள்: மாணவ, மாணவிகளே நீங்கள் தயாரா?

ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில், இளைஞர் தினத்தை முன்னிட்டு, மாணவ- மாணவிகளுக்கு போட்டிகள் ஏற்பாடு செய்யப்படுள்ளன.

Update: 2021-06-30 13:51 GMT

வரும் ஜூலை 15-ந் தேதி இளைஞர் தினத்தை முன்னிட்டு, ஈரோடு மாவட்ட போலீஸ் சார்பில் வரும், மாவட்டத்தில் உள்ள மாணவ- மாணவிகளின் திறனை வெளிப்படுத்த பல்வேறு தலைப்புகளில் போட்டிகள் நடத்தப்படவுள்ளன.

அதன்படி 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ -மாணவிகளுக்கு கொரோனா விழிப்புணர்வு குறித்த ஓவியப்போட்டிகள்; 10-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ -மாணவிகளுக்கு கல்வியின் முக்கியத்துவம் குறித்த கட்டுரை (700 வார்த்தைகளுக்கு மிகாமல் ) இருக்க வேண்டும். கல்லூரி மாணவ -மாணவிகளுக்கு கொரோனா விழிப்புணர்வு குறித்த குறும்படம் (அதிகபட்சம் 3 நிமிடங்கள் வரை) ஆகிய போட்டிகள் நடத்தப்படுகின்றன.

இதில் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு, தங்களது திறமைகளை, ஈரோடு டிஸ்ட்ரிக்ட் போலீஸ்- இவென்ட்ஸ் என்ற பேஸ்புக் பக்கத்தில், இன்று முதல் வரும் 13ம் தேதி காலை 10 மணிக்குள் பதிவிட வேண்டும். ஒவ்வொரு தலைப்புகளில் இருந்தும் சிறந்த முதல் மூன்று மாணவ -மாணவிகளுக்கு,  ஈரோடு மாவட்ட போலீஸ் சார்பாக பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும். இந்த தகவல் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News