ஈரோடு மாவட்டத்தில் இன்று 79 பேர் கொரோனாவால் பாதிப்பு
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா சிகிச்சையில் இருந்து 92 பேர் குணமடைந்து வீடு திரும்பியதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.;
பைல் படம்.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று 8 ஆயிரத்து 526 பேருக்கு பரிசோதனை செய்ததில், 77 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது. இந்த நிலையில் இன்று சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்ட பட்டியலின்படி ஈரோடு மாவட்டத்தில் புதிதாக மேலும் 79 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 1 லட்சத்து 4 ஆயிரத்து 164 ஆக உயர்ந்தது.
மேலும் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 92 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை மாவட்டத்தில் மொத்தம் 1 லட்சத்து 2 ஆயிரத்து 645 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு உள்ளனர். மாவட்டத்தில் இதுவரை 682 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ள நிலையில் தற்போது தொற்று உள்ள 837 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.