ஈரோடு மாவட்டத்தில் இன்று 1,302 பேர் கொரோனாவால் பாதிப்பு

ஈரோடு மாவட்டத்தில் இன்று 901 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-01-26 15:00 GMT

பைல் படம்.

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவல் தினமும் உயர்ந்த வண்ணம் உள்ளது. நேற்று 4 ஆயிரத்து 806 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 1,229 பேருக்கு தொற்று உறுதியானது. இந்த நிலையில் இன்று மட்டும் புதிதாக 1,302 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 21 ஆயிரத்து 136 ஆக உயர்ந்தது. இதில் 1 லட்சத்து 12 ஆயிரத்து 680 பேர் குணமடைந்தனர். இன்று மட்டும் 901 பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர். தற்போது 7 ஆயிரத்து 734 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு 722 பேர் பலியாகி உள்ளனர்.

Tags:    

Similar News