ஈரோடு மாவட்டத்தில் மாலை 5 மணி நிலவரப்படி 65 சதவீதம் வாக்குப்பதிவு

ஈரோடு மாவட்டத்தில் மாலை 5 மணி நிலவரப்படி 65.67 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

Update: 2022-02-19 11:45 GMT

கோப்பு படம்.

தமிழகம் முழுவதும் நகர்ப்புற தேர்தலில் இன்று மாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சி பகுதிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி, மாநகராட்சியில் 56.17 சதவீதமும் , நகராட்சியில் 71.15 தவீதமும், பேரூராட்சியில் 74.42 சதவீதமும் பதிவாகியுள்ளது. இதுவரை மாவட்டத்தில் மொத்தம் 65.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

Tags:    

Similar News