ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 18,702 பேருக்கு கொரோனா தடுப்பூசி

ஈரோடு மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற 19-வது கட்ட மாபெரும் முகாமில் 18,702 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது

Update: 2022-01-23 12:45 GMT

பைல் படம்

ஈரோடு மாவட்டத்தில் 19-வது கட்ட மாபெரும் தடுப்பூசி முகாமானது, 503 இடங்களில் நேற்று  நடந்தது. இதில், 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. நேற்றைய சிறப்பு முகாம் பணியில் 2,012 பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டனர். நேற்று காலை 9 மணிக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கிய நிலையில், மாலை 5 மணி வரை தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் 18 ஆயிரத்து 702 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News