தொடர் மழையால் வரத்து குறைவு: ஈரோட்டில் காய்கறி விலை கிடுகிடு உயர்வு

ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து மழையால் வரத்து குறைந்து, காய்கறிகள் விலை அதிகரித்து வருகிறது.

Update: 2021-11-20 03:15 GMT

கோப்பு படம் 

ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் காய்கறிகள் விளைச்சல் குறைந்து விட்டது. இதன் காரணமாக ஈரோடு நேதாஜி காய்கறி மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வரத்து குறைந்துள்ளது. . இதனால் அவற்றின் விலை படிப்படியாக உயர்ந்து வருகிறது. அதன்படி கடந்த 13-ந்தேதி ரூ.80-க்கு விற்பனையான ஒரு கிலோ தக்காளி ரூ.20 விலை உயர்ந்து, ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் ரூ.80-க்கு விற்பனையான கத்தரிக்காய் ரூ.120-க்கும், ரூ.70-க்கு விற்பனையான வெண்டைக்காய் ரூ.80-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட்டில் காய்கறி விலை கிலோவில் வருமாறு: தக்காளி-ரூ.100, கத்தரிக்காய் - ரூ.120, வெண்டைக்காய் - ரூ.70, பீர்க்கங்காய் - ரூ.60, புடலங்காய் - ரூ.60, முள்ளங்கி - ரூ.50, கேரட் - ரூ.60, பீட்ரூட் -ரூ.40, கருப்பு அவரைக்காய் - ரூ.130, பெல்ட் அவரைக்காய் - ரூ.100, முருங்கைக்காய் - ரூ.150, பச்சை மிளகாய் - ரூ.40, காலிபிளவர் - ரூ.60, உருளைக்கிழங்கு - ரூ.40. வாழைக்காய் ஒன்று ரூ.5-க்கு விற்பனை செய்யப்பட்டது.

Tags:    

Similar News