தடுப்பூசி செலுத்திக்கொள்ள வீடு வீடாக சென்று ஆணையாளர் வலியுறுத்தல்
ஈரோடு மாநகரில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வீடு வீடாக சென்று மக்களிடம் மாநகராட்சி ஆணையாளர் வலியுறுத்தி வருகிறார்.;
தடுப்பூசி செலுத்திக்கொள்ள வீடு வீடாக சென்று வலியுறுத்திய மாநகராட்சி ஆணையாளர்.
ஈரோடு மாநகராட்சி பகுதியில் ஐந்தாவது தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.
இதன் தொடர்ச்சியாக ராஜாஜிபுரம் பகுதியில் வீடுதோறும் சென்று கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இந்த சிறப்பு முகாமில் மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்திக்கொள்ள பொதுமக்களிடம் வலியுறுத்தி வருகிறார்.
மேலும் மருத்துவ அலுவலர், உதவி ஆணையாளர், சுகாதார அலுவலர்கள் இப்பணியை செய்து வருகின்றனர்.