ஈரோடு மாவட்ட காங்கிரஸ் சார்பில் விழிப்புணர்வு பிரச்சார பயணம்

மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைக்கு எதிராக ஈரோடு மாவட்ட காங்கிரஸ் சார்பில் விழிப்புணர்வு பிரச்சார பயணம் நடைபெற்றது.

Update: 2021-11-29 05:00 GMT

மாவட்ட காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற மக்கள் விழிப்புணர்வு பிரச்சார பயணம்

ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஈ.பி. ரவி தலைமையில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா முன்னிலையில் விழிப்புணர்வு பிரச்சார பயணம் தொடங்கியது. பிரச்சாரத்தில் கட்சி நிர்வாகிகளுடன் பேரணியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்த விழிப்புணர்வு பிரச்சார பயணம் பவானி மெயின் ரோடு, பழைய காமதேனு திருமண மண்டபத்தில் தொடங்கியது. காவிரி ரோடு வழியாக சென்று சத்திசாலை, வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தத்தில் நிறைவடைந்தது. அங்கு மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கை, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உட்பட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்தும், அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் தனியார் மயமாக்குவதை கண்டித்தும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எம் எல் ஏ திருமகன் ஈவெரா பேசினார்.

Tags:    

Similar News