ஈரோடு மாநகராட்சியின் புதிய ஆணையாளர் பொறுப்பேற்பு

ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் ஆக இன்று சிவகுமார் பொறுப்பேற்றார்.

Update: 2021-11-25 12:30 GMT

ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் ஆக இன்று சிவகுமார் பொறுப்பேற்றார்.

ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் ஆக இன்று சிவகுமார் பொறுப்பேற்றார்.

இவர் ஆவடி மாநகராட்சியில் ஆணையாளராக பணியாற்றி பணியிட மாறுதல் மூலம் ஈரோடு மாநகராட்சி ஆணையாளராக பொறுப்பேற்றுள்ளார். அதன்படி இன்று ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் பொறுப்பேற்றார். அவரை மாநகராட்சி ஊழியர்கள் , பொறியாளர்கள், பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஈரோடு மாநகராட்சி சேர்ந்த பொதுமக்கள் எதிர்பார்க்கும் முறையில் சிறப்பாக பணியாற்றி அரசின் திட்டங்களை குழு அமைத்து புதிய முயற்சிகளை ஏற்படுத்த உள்ளோம். ஈரோடு மாநகராட்சி சேர்ந்த மக்கள் கலாச்சார மிக்கவர்களாகவும், நாகரீகத்துடனும் உள்ள இம்மக்கள் உடல் பணியாற்ற வாய்ப்பு அளித்த அரசுக்கு நன்றி தெரிவித்தார்.

ஈரோடு கார்ப்பரேஷன் மாநகராட்சியில் அடிப்படை வசதிகள் விரைவில் முடிக்க நடவடிக்கை எடுப்போம் எனவும் வரும் ஜனவரி முதல் முழுவீச்சில் பணிகள் துவக்கப்படும் என்றார். மேலும் பொருளாதார பாதிப்பின் காரணமாக மத்திய மாநில அரசுகளிடம் இருந்து வரவேண்டிய நிதி ஆதாரம் பாதிப்பினால் பணிகள் முழுமை அடையவில்லை. ஜனவரி முதல் பணிகள் விரைவில் முடிக்கப்படும் என்றார்

Tags:    

Similar News