முரசொலிமாறன் 18 ம் ஆண்டு நினைவு தினம்: அமைச்சர் முத்துசாமி மாலை அணிவித்து மரியாதை

முரசொலிமாறனின் 18ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அமைச்சர் முத்துசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Update: 2021-11-23 09:45 GMT

அமைச்சர் முத்துசாமி மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

ஈரோடு மணல் மேடு பகுதியில் அமைந்துள்ள தெற்கு மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அறிவாலையத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலிமாறனின் 18 ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தமிழக நகர்புற வளர்சி மற்றும் வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டு முரசொலி மாறன் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் திமுக மாநில நெசவாளர் அணி செயலாளர் சச்சிதானந்தம், துனை செயலாளர்கள், செந்தில்குமார், சின்னையன், செல்லப்பொன்னி, மாவட்ட பொருளாளர் பழனிசாமி, மாநகர செயலாளர் சுப்பிரமனிணி, செயற்குழு உறுப்பினர் திண்டல் குமாரசாமி, மணிராசு, பொதுகுழு உறுப்பினர் வில்லரசம்பட்டி முருகேசன், இளைஞர் அணி அமைப்பாளர் பிரகாஷ், மாணவர் அணி அமைப்பாளர் திருவாசகம் பகுதி செயலாளர்கள் லட்சுமனகுமார், ராமசந்திரன், அக்ணிசந்துரு, உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News