ஈரோடு மாநகராட்சி: திமுக முன்னாள் கவுன்சிலரின் மனைவி வேட்புமனு தாக்கல்

ஈரோடு மாநகராட்சி 52வார்டில் திமுக முன்னாள் கவுன்சிலரின் மனைவி திமுக சார்பில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார்.

Update: 2022-02-03 19:15 GMT

 திமுக முன்னாள் கவுன்சிலரின் மனைவி திமுக சார்பில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வேட்புமனு தாக்கல் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. ஈரோடு மாநகராட்சி தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் நள்ளிரவு வெளியிடப்பட்ட நிலையில் நேற்று காலை முதலே வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். இதனையடுத்து நேற்று மாநகராட்சி 52வது வார்டில் திமுக முன்னாள் கவுன்சிலர் பாலாஜியின் மனைவி சாந்தி பாலாஜிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. பிரப்சாலையில் உள்ள பழைய மாநகராட்சி கட்டிடத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தனது வேட்புமனுவை சாந்தி பாலாஜி தாக்கல் செய்தார்.

Tags:    

Similar News