ஈரோட்டில் மாநகராட்சி உறுப்பினர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர்

ஈரோட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற மாநகராட்சி உறுப்பினர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர் .

Update: 2022-03-02 07:30 GMT

ஈரோட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற மாநகராட்சி உறுப்பினர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர்.

ஈரோடு மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் வெற்றி பெற்றவர்கள் இன்று மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பதவி ஏற்றுக்கொண்டனர்.

60 வார்டுகளை சேர்ந்த உறுப்பினர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் சிவக்குமார் வேட்பாளர்கள் உறுதிமொழி முன்மொழிந்தார். இதனைத்தொடர்ந்து உறுப்பினர்கள் பதவியேற்று கொண்டு கையெழுத்திட்டனர்.

இதில் மாநகராட்சியை சேர்ந்த அதிகாரிகள், ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவேரா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News