ஈரோடு வணிக வளாகம்: முன்னுரிமை அடிப்படையில் கடைகள் ஒதுக்கீடு செய்ய மனு

கடைகள் ஒதுக்குவதில் ஏற்கனவே இருந்த கடைகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் கடைகள் ஒதுக்கீடு செய்ய வியாபாரிகள் மனு அளித்தனர்.

Update: 2022-02-16 06:45 GMT
மனு அளிக்க வந்த வியாபாரிகள்.

ஈரோடு மாவட்டம் பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் ஏராளமான ஜவுளி கடைகள் செயல்பட்டு வருகிறது. சீர்மிகு நகரம் திட்டத்தின் கீழ் ஜவுளிக்கடைகள் உள்ள இடத்தில் கடந்த 2019ல் வணிக வளாகம் கட்டுமான பணிகள் தொடங்கியது. இதனால் அப்பகுதியில் இருந்த ஜவுளி கடைகள், அருகிலும், வேறு இடத்திற்கும் மாற்றப்பட்டது. இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வணிக வளாகத்தில் முன்னுரிமை அடிப்படையில் கடைகள் ஒதுக்கீடு செய்ய வேண்டி ஜவுளி வியாபாரிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்

Tags:    

Similar News