ஈரோட்டில் பொதுமக்களுக்கு அல்வா கொடுக்கும் நிகழ்ச்சி

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தமிழக அரசுக்கு எதிராக ஈரோட்டில் பொதுமக்களுக்கு அல்வா கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

Update: 2022-01-24 09:30 GMT

ஈரோட்டில் பொதுமக்களுக்கு அல்வா கொடுக்கும் நிகழ்ச்சி

தமிழக அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக பல்வேறு தேர்தல் வாக்குறுதிகள் அளித்தது. நகை கடன் ரத்து, கல்வி கடன் ரத்து, விவசாய கடன் ரத்து, மகளிர் சுய உதவி குழு கடன் ரத்து, எரிவாயு உருளைக்கு 100 ரூபாய் மானியம்,  குடும்பத் தலைவிக்கு உரிமைத் தொகை மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் போன்ற வாக்குறுதிகளை அளித்தது. 

வாக்குறுதிகளை நிறைவற்றாததை பிரதிபலிக்கின்ற வகையில் இந்திய தேசிய கட்சியின் சார்பில் ஈரோடு ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு.அல்வா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Tags:    

Similar News