அரச்சலூர் கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற பாஜக கோரிக்கை

அரச்சலூர் கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற கோரி பாஜக சார்பில் ஈரோடு எஸ் பி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

Update: 2022-01-03 15:00 GMT

அரச்சலூர் கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற கோரி  ஈரோடு எஸ் பி அலுவலகத்தில் மனு அளிக்க வந்த பா.ஜ.கவினர்.

ஈரோடு மாவட்டம் அரச்சலூரில் வடிவேல் என்பவரை அடித்து கொலை செய்ததாக தம்பி (எ) ஈஸ்வரமூர்த்தி சில தினங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் வடிவேல் திமுகவிலிருந்து விலகி பாஜக வில் சேர்ந்ததால் அவர் கொலை செய்யப்பட்டதாகவும் இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டியும் தெற்கு மாவட்ட பாஜக சார்பில், ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில்  மனு அளிக்கப்பட்டது.

Tags:    

Similar News