மாநில அரசை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியினர் மனித சங்கிலி போராட்டம்

மாநில அரசை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியினர் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.

Update: 2021-11-30 06:45 GMT

மாநில அரசை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியினர் மனித சங்கிலி போராட்டம்.

பெட்ரோல், டீசல் விலையை ஒன்றிய அரசு குறைத்து வழங்கியும் மாநில பெட்ரோல் டீசலுக்கான வாட் வரியை குறைக்காத மாநில அரசை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியினர் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர். ஈரோடு தெற்கு மாவட்ட பாஜகவின் ஓபிசி அணியின் தெற்கு மாவட்ட தலைவர் சிவசங்கர், சீனிவாசன் தலைமையில் வீரப்பன் சத்திரத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் திமுக  அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். இதில் பாரதிய ஜனதா கட்சியினர் திரளாக பங்கேற்று வழி நெடுக மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News