மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

ஈரோட்டில் 1,498 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

Update: 2021-12-14 11:30 GMT

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் முத்துசாமி.

ஈரோட்டில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி பங்கேற்று காசோலைகளை வழங்கினார். இதில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 1,498  மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம், எம்எல்ஏ திருமகன் ஈவோரா, மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி, அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News