ஈரோடு: மூதாட்டியை தாக்கி 3 பவுன் நகை திருட்டு

சோலார் அருகே மூதாட்டியை தாக்கி 3 பவுன் நகை திருடியது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றது.

Update: 2021-12-09 12:00 GMT

பைல் படம்.

ஈரோடு-கரூர் பைபாஸ் ரோடு, இராணியன் வீதியை சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி சரோஜா (வயது 63). இந்நிலையில் இன்று காலை 5 மணியளவில் உணவகத்திற்கு உணவு செல்வதற்காக சரோஜா நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் சரோஜாவை பின் தொடர்ந்துள்ளனர்.

ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் கழுத்தில் இருந்த 3 பவுன் செயினை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு நபர் தலைக்கு குல்லா அணிந்திருந்தது அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி உள்ளது. இது குறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News