ஈரோடு மாநகரில் 82 சதவீதம் பேருக்கு தடுப்பூசி

ஈரோடு மாநகரில் 82 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Update: 2021-12-07 09:00 GMT

ஈரோடு மாநகராட்சி. 

ஈரோடு மாநகராட்சி பகுதியில் 3  லட்சத்து 87ஆயிரத்து 503 பேர் உள்ளனர். மாநகராட்சியில் மட்டும் முதல் தவணை தடுப்பூசியினை 82.71சதவீதம் பேர், அதாவது 3 லட்சத்து 20 ஆயிரத்து 522 பேர் செலுத்தியுள்ளனர். 2-ம் தவணை தடுப்பூசியினை 53.67 சதவீதம் பேர் அதாவது 2 லட்சத்து 7 ஆயிரத்து 971 பேருக்கு செலுத்தியுள்ளதாக ஈரோடு மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News