கோபிசெட்டிபாளையம் அருகே மின்சாரம் தாக்கி நிதி நிறுவன ஊழியர் பலி

கோபிசெட்டிபாளையம் அடுத்த பங்களாப்புதூர் அருகே இரும்பு கம்பியில் துணியை காயவைத்த போது, மின்சாரம் தாக்கியதில் நிதி நிறுவன ஊழியர் உயிரிழந்தார்.

Update: 2022-04-15 23:45 GMT

பைல் படம்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த பங்களாப்புதூர் அருகே உள்ள ஒட்டர்பாளையத்தை சேர்ந்தவர் வெள்ளிங்கிரி மகன் கார்த்திக்ராஜா. நிதி நிறுவன ஊழியராக வேலை செய்து வந்துள்ளார். வீட்டில் கார்த்திக்ராஜா  நேற்று காலை குளித்து விட்டு, துணியினை இரும்பு கம்பியில் மேல் காயவைத்துள்ளார்.

இரும்பு கம்பியில் ஏற்கனவே மின்கசிவு இருந்த நிலையில், கார்த்திக்ராஜா துணியினை காயவைக்கும் போது மின்சாரம் தாக்கியதில், தூக்கி வீசப்பட்டார். இதனையடுத்து, கார்த்திக்ராஜாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே கார்த்திக்ராஜா இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும், இதுகுறித்து பங்களாப்புதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News