தாளவாடி அருகே மக்காச்சோள தோட்டத்திற்குள் புகுந்து யானைகள் அட்டகாசம்

தாளவாடி அருகே மக்காச்சோள தோட்டத்திற்குள் புகுந்த யானைகள் பயிர்களை சேதம் செய்தன.

Update: 2021-12-02 14:30 GMT

சேதமடைந்த பயிர்கள். 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி அருகே உள்ள காந்திநகர் கிராமமானது தலமலை வனச்சரகத்திற்கு உட்பட்டது. வனச்சரகத்திற்கு உட்பட்ட விவசாய நிலத்தில்,  சோமையன் என்பவர் தனது நிலத்தில் 2 ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோள பயிர்களை பயிரிட்டு இருந்தார்.

இந்நிலையில் நேற்று இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானைகள், மக்காச்சோள பயிர்களை சேதம் செய்தன. இதனால் அப்பகுதி விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். யானைகளை விரட்ட நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

Similar News