சென்னிமலை: மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி

சென்னிமலை அருகே இரண்டு மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதில் முதியவர் பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை.

Update: 2021-11-26 10:00 GMT

பைல் படம்.

ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஈங்கூர் ரோடு பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் துரைசாமி (வயது 70). இவர் தனது மகள் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது சென்னிமலை, காமராஜ் நகர் பகுதியில் கட்டிட வேலை செய்யும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் ராமுதார், ராம்சரண், சைலேந்திரசிங் 3 பேர் மொபட்டில் வந்தனர். இதில் அவர்கள் வந்த மொபட் துரைசாமியின் மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராமல் மோதியது.

இதில் துரைசாமி தூக்கி  வீசப்பட்டு கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த துரைசாமி சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தார். இந்த விபத்தில் மற்றொரு மொபட்டில் வந்த வட மாநிலத்தை சேர்ந்த ராமுதார் மற்றும் ராம் சரண் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து சென்னிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News