மொடக்குறிச்சி அருகே என்ஜின் ஆயிலை குடித்த முதியவர் பலி

மொடக்குறிச்சி அருகே கண்பார்வையில் குறைபாடு உள்ள முதியவர் தண்ணீர் என நினைத்து என்ஜின் ஆயிலை குடித்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.

Update: 2021-12-18 10:15 GMT

பைல் படம்.

மொடக்குறிச்சி அடுத்த கண்ணுடையம்பாளையம்புதூர் பகுதியை சேர்ந்தவர் துரைசாமி (வயது 72). இவருக்கு கண்பார்வையில் குறைபாடு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று துரைசாமி வாந்தி எடுத்துள்ளார். இதுகுறித்து அவரது மகன் கேட்ட போது தண்ணீர் என நினைத்து வீட்டில் இருந்த என்ஜின் ஆயிலை குடித்துவிட்டதாக துரைசாமி கூறினார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது மகன் தந்தையை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு துரைசாமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி துரைசாமி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மலையம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News