பவானி: பணியிட மாற்றம் டிஎஸ்பி கார்த்திகேயனுக்கு பிரியாவிடை!

சித்தோடு அருகே நடைபெற்ற டிஎஸ்பி பிரியாவிடை நிகழ்ச்சியில், காவல்துறை சார்பில் டிஎஸ்பி கார்த்திகேயனுக்கு புகழாரம் சூட்டப்பட்டது.

Update: 2022-04-26 00:15 GMT

டிஎஸ்பி கார்த்திகேயனுக்கு,  ஆப்பக்கூடல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கோவிந்தராஜ் சால்வை அணிவித்து புகழாரம் சூட்டிய போது எடுத்த படம்.

ஈரோடு மாவட்டம் பவானி உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் கடந்த ஒன்றை வருடங்களாக பணியாற்றி வந்த நிலையில் திருப்பூர் மாவட்டத்திற்கு பணியிடம் செல்ல உள்ளார்.

இந்நிலையில் பவானி அடுத்துள்ள கங்காபுரம் டெக்ஸ்வேல்யூ வளாகத்தில் காவல்துறை சார்பில் பிரியாவிடை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் டிஎஸ்பி கார்த்திகேயன் அந்தியூர் முன்னாள் மருத்துவமனை அதிகாரி கவிதா மற்றும் சித்தோடு,அம்மாப்பேட்டை காவல் ஆய்வாளர்கள் மற்றும் பவானி போக்குவரத்து ஆய்வாளர்கள் உள்பட 100க்கும் மேற்பட்ட காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் பங்கேற்றனர். 


தொடர்ந்து அவரது பணி காலத்தில் அவர் செய்த திறம்பட செய்த வழக்கு சார்ந்த நிகழ்வுகள்,பொதுமக்களுக்கு உதவி செய்யும் மனப்பான்மை மற்றும் விவசாயிகளுக்கு கரும்பு தொகை பெற்று தந்த உள்ளிட்ட செயல்கள் சக போலீசார் நினைவு கூர்ந்து டிஎஸ்பி கார்த்திகேயனுக்கு புகழாரம் சூட்டினர்.

தொடர்ந்து காவல்துறையினர் நினைவு பரிசுகளை வழங்கி டிஎஸ்பி கார்த்திகேயனை பிரியா விடை கொடுத்து வழி அனுப்பி வைத்தனர். முன்னதாக தனிப்பிரிவு காவல் ஆய்வாளர்,  சினிமா பாடல் பாடி, அவரை வழி அனுப்பி வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News