கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் திமுக வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு

கோபிசெட்டிபாளையத்தில் வார்டு 21, 26ல் போட்டியிடும், திமுக வேட்பாளர்களை ஆதரித்து மாவட்ட செயலாளர் நல்லசிவம் வாக்கு சேகரிப்பு

Update: 2022-02-09 12:30 GMT

திமுக வேட்பாளர்களுடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட மாவட்ட செயலாளர் நல்லசிவம்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற‌ 19ஆம் தேதி நடைபெற உள்ளது. தற்போது, அரசியல் கட்சிகள் பிரசாரங்கள் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் உள்ள 21வது மற்றும் 26வது வார்டுகளில் போட்டியிடும், திமுக வேட்பாளர்கள் போட்டியிடுகிறார். 

இதனையடுத்து, வேட்பாளர்களை ஆதரித்து, இன்று வீடு வீடாக சென்று திமுக மாவட்ட கழக செயலாளர் நல்லசிவம், அரசின் திட்டங்களை எடுத்துக் கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வாக்கு சேகரிப்பின் போது, நகர செயலாளர் நாகராஜ் மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News