சாய கழிவுகளை வெளியேற்றிய 2 ஆலைகளின் மின் இணைப்பு துண்டிப்பு

ஈரோட்டில் சாய கழிவுகளை சாக்கடையில் கலந்து விட்ட இரண்டு தொழிற்சாலைகளுக்கு மின் இணைப்பு துண்டிப்பு.

Update: 2021-12-17 11:00 GMT

பைல் படம்.

ஈரோடு சூரியம்பாளையம் பகுதியில் இயங்கிய சலவை தொழிற்சாலையும், வெட்டுக்காட்டுவலசு பகுதியில் இயங்கிய சாய தொழிற்சாலையும் கழிவு நீரை சுத்திகரிக்காமல், சாக்கடை கால்வாயில் வெளியேற்றி வந்துள்ளனர். இதனையடுத்து அப்பகுதி பொதுமக்களின் புகாரின் பேரில், மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அவ்விடத்தில் ஆய்வு செய்து, இரு ஆலைகளின் மின் இணைப்பை துண்டித்தனர்

Tags:    

Similar News