பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ரூ.82.20 லட்சம் உண்டியல் காணிக்கை
ஈரோடு மாவட்டம் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ரூ.82.20 லட்சத்தை பக்தர்கள் உண்டியல் காணிக்கை செலுத்திருந்தனர்.;
பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ரூ.82.20 லட்சத்தை பக்தர்கள் உண்டியல் காணிக்கை செலுத்திருந்தனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே பண்ணாரியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்கு வசதியாக கோவில் மற்றும் அதன் வளாக பகுதியில் 21 உண்டியல்கள் வைக்கப்பட்டு உள்ளன.
இந்த உண்டியல்களில் செலுத்தப்படும் காணிக்கைகள் மாதந்தோறும் திறந்து எண்ணப்படுவது வழக்கம். அதன்படி இந்த மாதம் கோவில் உண்டியல்களை திறந்து எண்ணும் பணி நேற்று (மார்ச் 20) நடைபெற்றது.
கோவில் செயல் அலுவலர் மேனகா, ஈரோடு இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சுகுமார், ஆய்வாளர் சங்கர கோமதி ஆகியோர் முன்னிலையில் உண்டியல் காணிக்கைகளை எண்ணும் பணி நடைபெற்றது.
இந்த பணியில் பரம்பரை அறங்காவலர்கள் புருஷோத்தமன், ராஜாமணி தங்கவேல், அமுதா, பூங்கொடி, கண்காணிப்பாளர் சங்கர், வெற்றி நர்சிங் கல்லூரி மாணவிகள், கோவில் தன்னார்வலர்கள், கோவில் பணியாளர்கள். வங்கி அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதில், உண்டியல் காணிக்கையாக ரூ.82 லட்சத்து 20 ஆயிரத்து 260 ஐ பக்தர்கள் செலுத்தி இருந்தனர். மேலும், 388 கிராம் தங்கம், 527 கிராம் வெள்ளியும் உண்டியலில் காணிக்கையாக செலுத்தப்பட்டு இருந்தது.