அந்தியூர் அருகே சாக்கடை கால்வாயில் கிடந்த ஆண் சடலம்
அந்தியூர் அருகே சாக்கடை கால்வாயில் கிடந்த சடலத்தை மீட்டு, போலீஸ் விசாரணை செய்து வருகின்றனர்.;
ஈரோடு மாவட்டம் அந்தியூர் தவிட்டுப்பாளையம் பகுதியில், 35 வயது மதிக்கத்தக்க ஒருவரிடன் சடலம், சாக்கடை கால்வாயில் கிடந்துள்ளது. இதனைப் பார்த்த அப்பகுதியில் செல்பவர்கள், இதுகுறித்து அந்தியூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், கால்வாயில் இருந்து சடலத்தை மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், இறந்தவர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில், அவர் கோபிசெட்டிபாளையம் வெள்ளாளபாளையத்தை சேர்ந்த சதீஸ் (32) என்பது தெரியவந்துள்ளது. அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது சாக்கடை கால்வாயில் தவறி விழுந்து இறந்தாரா? என்பது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.