கவுந்தப்பாடியில் மார்க்கெட் கமிட்டியில் ரூ.50 லட்சத்துக்கு நாட்டு சர்க்கரை ஏலம்

கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.50 லட்சத்துக்கு நாட்டு சர்க்கரை ஏல விற்பனை நடைபெற்றது.

Update: 2021-11-28 05:30 GMT

நாட்டு சர்க்கரை.

ஈரோடு மாவட்டம், பவானி அருகே உள்ள கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நாட்டு சர்க்கரை ஏலம் நடந்தது. இந்த ஏலத்துக்கு கவுந்தப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் 1,773 மூட் டைகளில் நாட்டு சர்க்கரையை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.

இதில் 60 கிலோ முதல் தரம் நாட்டு சர்க்கரை மூட்டை குறைந்தபட்ச விலையாக ரூ.3 ஆயிரத்து 30க்கும், அதிக பட்ச விலையாக ரூ.3 ஆயிரத்து 50-க்கும், 2-வது தரம் (மீடியம்) குறைந்தபட்ச விலை யாக ரூ.2 ஆயிரத்து 800-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.2 ஆயிரத்து 900-க்கும் என மொத்தம் ரூ.50 லட்சத்து 5 ஆயிரத்து 600-க்கு ஏலம் போனது.

இந்த நாட்டு சர்க்கரை மூட்டைகள் அனைத்தையும் பழனி முருகன் கோவில் நிர்வாகத்தினரே கொள்முதல் செய்தனர். இதேபோல் குண்டு வெல்லம் 10 சிப்பம் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தது. இது ஒரு சிப்பம் ரூ.1,500 வீதம் என மொத்தம் ரூ.15 ஆயிரத் துக்கு விற்பனை ஆனது. இந்த தகவலை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News