ஈரோடு மாவட்டத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) 290 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்

ஈரோடு மாவட்டத்தில் நாளை 40 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Update: 2021-10-25 15:00 GMT

பைல் படம்.

ஈரோடு மாவட்டத்தில் நாளை (26.10.2021) செவ்வாய்க்கிழமை 290 இடங்களில் 40 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொரோனா பெருந்தொற்றை தடுக்க தடுப்பூசி செலுத்தும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை ஆறு கட்டங்களாக மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றுள்ளன. நாளை (செவ்வாய்க்கிழமை) 290 இடங்களில் 40 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. இதில் ஈரோடு மாநகராட்சி பகுதியில் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் உட்பட மொத்தம் 40  இடங்களில் 8 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளன.

Tags:    

Similar News